×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு

மேட்டூர்: கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து சரிந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 3வது நாளாக இன்றும் விநாடிக்கு 4843 கனஅடியாகவே நீடிக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 4,000 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து 5வது நாளாக நீர்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக உள்ளது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.




Tags : Oakenakkal ,Okenacal , Water , Okenacal,extension
× RELATED கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு