×

கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பென்னாகரம்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 1500 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், நேற்று காலை முதல் விநாடிக்கு  6 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் மெயினருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் 2,250 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை  விநாடிக்கு 2,389 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர்  தேவைக்காக 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின்  நீர்மட்டம் 100.86 அடியாகவும், நீர் இருப்பு 65.96 டிஎம்சியாகவும் உள்ளது.



Tags : Oakenakkal , Increase ,water supply,Oakenakkal due, heavy rains
× RELATED ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 18...