×

பழநி அருகே அதிமுக கறி விருந்தில் விரட்டி கொட்டிய குளவிகள்

பழநி: பழநி அருகே அதிமுக வேட்பாளர் வைத்த விருந்தில் கலந்து கொண்டவர்களை குளவிகள் விரட்டி விரட்டி கொட்டின. திண்டுக்கல் மாவட்டம், பழநி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அமரபூண்டி ஊராட்சி தலைவர் பதவி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு கடைசி நாளான நேற்று ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இவர்களில் அதிமுகவை சேர்ந்த சிலர் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு, தங்களது தோட்டங்களில் உடன் வந்தவர்களுக்கு ‘கமகம கறி விருந்து’ வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது தோட்டத்தில் உள்ள குளவிகள் கலைந்து விருந்தில் கலந்து கொண்டவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.  

இதில் படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் ஆட்டோக்களில் பழநி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களில் 8 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரித்தனர். தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குழவிக்கூடு கலைந்து கொட்டி விட்டதாக தெரிவிக்கவே அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

Tags : Wasps ,curry party ,AIADMK ,Palani ,Athmika , Palani, Athmika, Curry Party, Chased, Wasps
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...