செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த பவுஞ்சூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1.20 கோடி மோசடி செய்ததாக நகைக்கடை உரிமையாளர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.1.20 கோடி பணத்துடன் தலைமறைவான நகைக்கடை உரிமையாளர் மோகன்லால் மீது அணைக்கட்டு போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.