திருவாரூர்: திருவாரூர் அருகே வடகண்டம் ஊராட்சி மன்ற அலுவலக பூட்டை உடைத்து வேட்புமனுக்கள் திருடப்பட்டுள்ளன. அதிமுக உட்பட 27 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் மனுக்கள் திருடப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. நாளையுடன் வேட்புமனுதாக்கல் நிறைவடையும் நிலையில் வேட்புமனுக்கள் திருட்டை குடவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.