சென்னை: உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சட்டத்திற்கும், மக்களாட்சி தத்துவத்திற்கும் புறம்பாக நடைபெறும் இத்ததைய செயல்கள் வருந்தத்தக்கவை. மேலும் மக்கள் தேர்வு செய்யும் பதவிகள் ஏலம் விடப்படுவது அவர்கள் உணர்வுகளுக்கு ஊறுவிளைவிக்கும் செயல் என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.