×

தேவையில்லாமல் என் மீது அவதூறு நடிகை ஜெயஸ்ரீ எனக்கு தங்கை போன்றவள்: மகாலட்சுமியின் கணவர் அனில் பேட்டி

சென்னை: சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் குடும்ப பிரச்னையில், தேவையில்லாமல் என் மீது அவதூறு பரப்பப்படுகிறது, நடனக்கலைஞரும் நடிகையுமான ஜெயஸ்ரீ  எனக்கு தங்கை போன்றவர் என்று நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் நேற்று கூறினார். சென்னை, அடையாறு எல்.பி. சாலையில் உள்ள தி.எம்ப்ரஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடனக்கலைஞரும், நடிகையுமான ஜெயஸ்ரீ  (32). இவருக்கும் அவரது  கணவரான சின்னத்திரை நடிகர் ஈஸ்வருக்கும் இடையே சமீபத்தில் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ஈஸ்வர் மீது அவரது மனைவி ஜெயஸ்ரீ  புகார் அளித்தார். அதன் அடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து ஈஸ்வரை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் ஜாமீனில் வெளியே வந்தவுடன் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும், ஜெயஸ்ரீ க்கும் தொடர்பு உள்ளதாக பேட்டி அளித்தார். இச்சம்பவம் சினிமாத்துறையினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில் சென்னையில் நேற்று பத்திரிகையாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:  ஈஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் எனக்கு நெடுங்கால நண்பர்கள்.  ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ  எனக்கு தங்கை போன்றவள்.  கடந்த தீபாவளியன்று நானும் ஜெயஸ்ரீயும் நெருங்கி பழகியதாகவும், அது தொடர்பாக ஈஸ்வர் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். மேலும், தீபாவளியன்று ஈஸ்வர் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நடைபெற்ற ‘கெட்டுகெதரில்’ பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தவறாக சித்தரிக்கின்றனர். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது என்னிடம் உள்ள ஆதாரங்களை காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Jayasree ,Anil ,Mahalakshmi ,sister , Interview with Jayasree, Mahalakshmi's husband, Anil
× RELATED வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்;...