×

பாஜ உருவாக்குவதில் அல்ல விற்பதில் திறமை வாய்ந்தது: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

புதுடெல்லி:  ‘பாஜ அரசு, விற்பதில்தான் திறமை வாய்ந்தது’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். சிஏஜி எனப்படும் தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு, நேற்று முன்தினம் ரயில்வே தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், ‘2017-2018ம் ஆண்டில் ரயில்வேயின் இயக்க விகிதம் 98.44 சதவீதமாகும். இது, 100 ரூபாய் வருமானம் ஈட்டுவதற்கு 98.44 சதவீதம் செலவாகுகிறது என்பதை குறிப்பிடுகிறது. ரயில்வே இயக்க விகிதம் அதிகரிப்பது ஆரோக்கியமான விஷயம் இல்லை. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் மோசமான நிலை,’ என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரயில்வே குறித்த தணிக்கை அறிக்கையை அடிப்படையாக கொண்டு பாஜ அரசை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்திய ரயில்வே துறை, நாட்டின் உயிர்நாடி போன்றது. தற்போது, பாஜ அரசு  ரயில் சேவையையும் மிகவும் மோசமான நிலைக்கு கொண்டுவ ந்துள்ளது. மற்ற அரசு நிறுவனங்களை போலவே இன்னும் சில நாட்களில் ரயில்வேயையும் மத்திய அரசு விற்பதற்கு தொடங்கிவிடும். இந்த அரசானது உருவாக்குவதில் அல்ல;. விற்பதில்தான் திறமை வாய்ந்தது,’ என்று கூறியுள்ளார்.



Tags : Priyanka Gandhi ,Baja BJP ,selling , BJP, Priyanka Gandhi
× RELATED வயநாட்டில் கம்பளகாடு பகுதியில் பிரியங்கா காந்தி ரோடு ஷோ..!!