நாகர்கோவில்: கன்னியாகுமாரி மாவட்டம் புத்தேரியில் தனியார் நிறுவனத்தில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி குடிநீர் திட்டத்துக்கு குடிநீர்குழாய் சப்ளை செய்த தகல் இன்ஜினியரிங் லிமிட் நிறுவனத்தில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.