மதுரை: உள்ளாட்சி தேர்தலில் மதம் மாறியவர்கள் போட்டியிட தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கிருஸ்துவ, இஸ்லாமிய சமூகத்திற்கு மதம் மாறியவர்கள் போட்டியிட தடை கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆதி திராவிட, பழங்குடியின சமூகத்துக்காக ஒதுக்கிய வார்டுகளில் மதம் மாறியவர்கள் போட்டியிடக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்றம் தலையிட இயலாது என உயர்நீதிமன்ற கிளை கூறியது.