டெல்லி: தலைவர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் நவீனப்படுத்தப்பட்ட சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியாருக்கு விற்கக்கூடாது என டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தியுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடும் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.