புதுடெல்லி: இருநாட்டு உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்பதே என் விருப்பம் என்று இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பேட்டியளித்த அவர், பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என கூறியுள்ளார்.