×

பிரதமருடன் மார்பிங் செய்த புகைப்படம் பதிவு 2 பேர் சிக்கினர்

கோவை: கோவை பீளமேடு புதூர் பகுதியை சேர்ந்தவர் கவிதமிழ்ச்செல்வன்(42).  நுகர்வோர் அமைப்பு நிர்வாகி என்று கூறி பேஸ்புக்கில் பதிவிட்டு வந்துள்ளார். பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது சீன அதிபருடன் சந்தித்து உரையாடிய புகைப்படத்தை, அவருடன் தான் கை குலுக்குவதுபோன்று மார்பிங் செய்து  வாட்ஸ்அப், பேஸ்புக்கில் கவிதமிழ்செல்வன் பதிவிட்டுள்ளார். இது பற்றிய புகாரின்படி மாநகர சைபர் கிரைம் பிரிவு போலீசார் நேற்று கவிதமிழ்ச்செல்வனை பிடித்து விசாரணை நடத்தினர். ராஜசேகரன் என்பவர்  மார்பிங் செய்து கொடுத்தது தெரியவந்தது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.



Tags : Prime Minister Photo entry , Morphing, Prime Minister, trapped
× RELATED இன்று அதிகாலை பயங்கரம்; மீஞ்சூரில்...