கோவை : கோவை மாநகராட்சியை கண்டித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தலைமையில் 1000திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கோவை மாநகராட்சியில் குடிநீர் வழங்கும் உரிமத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்கியதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.