டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் கோரிய வழக்கை நாளைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஐயால் கைது செய்யப்பட்ட வழக்கில் அக்டோபர் 22-ம் தேதி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் சிதம்பரத்தின் சிறைவாசம் நாளை 100-வது நாளை எட்டுகிறது.