×

எப்ஐஆர் நகல் கொடுக்க லஞ்சம் வாங்கிய ஏட்டுக்கு 2 ஆண்டு சிறை

ஈரோடு: ஈரோடு மாவட்டம் அரச்சலூரை சேர்ந்தவர் சாமிநாதன் (42). இவர், கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிதடி வழக்கு தொடர்பாக அரச்சலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்ததையடுத்து அவர் எப்ஐஆர்  நகலை ஏட்டு திருமூர்த்தி (53)யிடம் கேட்டார். ஆனால், ஏட்டு அதற்கு 500 லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து சாமிநாதனிடம் லஞ்ச பணத்தை வாங்கும்போது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு, ஈரோடு முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதி, ஏட்டு திருமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து அவர் கோவை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : jail ,FIR ,prison , FIR,copy, prospectus, prison
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...