×

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை சார்பில் கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்வாரும் பணி: விவசாயிகள் மகிழ்ச்சி

நாசரேத்: நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் அறக்கட்டளை சார்பில் கடம்பாகுளம் பாசன கால்வாய் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை அருகே உள்ள கடம்பாகுளத்தை நம்பி 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த குளத்தில் உள்ள 10 மடைகளின் வாய்க்கால்கள் அனைத்தும் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடந்தது.. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்தாண்டு இக்குளத்தின் 7ம் நம்பர் மடை கால்வாயை தூர்வார விவசாயிகள், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரசிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளை சார்பில் 7ம் நம்பர் மடை கால்வாயை தூர்வாரினர்.

தற்போது 4ம் நம்பர் மடையை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து இயேசு விடுவிக்கிறார் ஊழிய அறக்கட்டளையின் சார்பில் குருகாட்டூர், கோட்டூர், மஞ்சள்விளை, ராஜாங்கபுரம், தென்திருப்பேரை, மாவடிப்பண்ணை, தொட்டியன் குடியிருப்பு வரை சுமார் 15 கிலோ மீட்டர் வரை கால்வாய் தூர்வாரும் பணி நடக்கிறது. ரூ.2.50 மதிப்பீட்டில் கடந்த 7ம் தேதி துவங்கிய இப்பணி, வருகிற 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் 12 கிராம விவசாயிகள் பயனடை
வர். நிகழ்ச்சியில் கடம்பாகுளம் பாசன விவசாய சங்க தலைவர் சிந்தாசெல்வின், சங்க உறுப்பினர் ஜேசுதாஸ், பொதுப்பணித்துறை லஸ்கர் சண்முகவேல், சங்கரன், இயேசு விடுவிக்கிறார் மக்கள் தொடர்பு அதிகாரி சாந்தகுமார் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.



Tags : irrigation canal ,Trust , Nalumavadi, Kadambakulam, Irrigation Canal Project
× RELATED சிங்கத்தாகுறிச்சி சுகாதார...