×

நெல்லையில் பிச்சையெடுத்த சிறுவர், சிறுமியர் மீட்பு

நெல்லை: நெல்லை ஊசி கோபுரம் தேவாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்திருந்தனர். அப்போது தேவாலயம் முன் பலர் குழந்தைகளுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தனர். இதுகுறித்து சைல்ட் ஹெல்த் லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தைகள் நலத்தலைவர் சந்திரகுமார் உத்தரவுப்படி அந்தோணி உள்ளிட்ட களப் பணியாளர்கள் அந்த பகுதிக்கு வந்தனர்.

அப்போது அங்கு பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 10 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள், ஒரு சிறுமி ஆகியோரை மீட்டனர். அவர்களுடன் இருந்த ஒரு பெண்ணையும் மீட்டடனர். பின்னர் அவர்கள் குழந்தைகள் சரணாலயத்தில் ஒபப்டைக்கப்பட்டனர்.

Tags : Recovery ,boys ,girls , Paddy, child, child, rescue
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு