×

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி உள்ளிட்ட அணைகளில் இருந்து பிசான சாகுபடிக்கு நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனாநதி, அடவிநயினார் உள்ளிட்ட நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். பிசான சாகுபடிக்கு 26-ம் தேதி முதல் அடுத்தாண்டு மார்ச் 26-ம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார். அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட வட்டங்களில் 32,024.58 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், முக்கிய அணைகள் நிரம்பி உள்ளன. இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் பிசான சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை ஏற்று கடனா, ராமநதி, அடவிநயினார் மற்றும் கருப்பாநதி ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அணைகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இவ்வணைகளின் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் நடப்பாண்டு பிசான சாகுபடி செய்வதற்காக தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயப் பெருமக்களின் வேண்டுகோளை ஏற்று, கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களில் இருந்து பிசான சாகுபடிக்கு 26-11-2019 முதல் 29-3-2020 வரை 125 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களில் உள்ள 32,024.58 ஏக்கர் நேரடி மற்றும் மறைமுகப் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Palanisamy ,dam ,Ramanadi ,Kadananadi ,Paddy District ,Ramanadi Dam , Paddy, Kadananathi, Ramanadi, Bisana cultivation, Chief Minister Palanisamy
× RELATED முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு...