சென்னை: கோவையில் இளம்பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தகவல் அளித்துள்ளார். அரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்த கட்சியிடமே ஏன் நிவாரணம் வசூலிக்க கூடாது என ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. போலீஸ் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.