பெங்களூரு: கர்நாடகா-தமிழக விவசாயிகளின் ஜீவநாடியாக விளங்கும் கே.ஆர்.எஸ். அணை கடந்த 86 ஆண்டுகளுக்கு பின் 100வது நாளாக அதன் முழு கொள்ளளவை குறைவில்லாமல் தக்க வைத்துள்ளது. காவிரியின் குறுக்கே மண்டியா மாவட்டம், ரங்கபட்டணா தாலுகாவில் உள்ள கண்ணம்பாடி கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு அணை கட்ட அப்போது மைசூரு மன்னராக இருந்த ஜெயசாமராஜேந்திர உடையார் முடிவு செய்தார். விஞ்ஞானி சர்.எம்.விஷ்வேஸ்வரையாவின் ஒத்துழைப்பில் கட்டி முடிக்கப்பட்டது.