×

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று நேற்று கரை ஒதுங்கியது.ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரை பகுதியில் சில நாட்களுக்கு முன்பு துடுப்புகள் வெட்டப்பட்டு இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது. நேற்று கோதண்டாமர் கோயில் கடற்கரை பகுதியில், இறந்த நிலையில் ஆமை ஒன்று கரை ஒதுங்கியது.

மூன்று அடி நீளம், சுமார் 30 கிலோ எடையுடன் இருந்த கடல் ஆமை மீனவர்களின் படகில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். ராமேஸ்வரம், தனுஷ்கோடி, பாம்பன், குந்துகால் கடல் பகுதியில் சமீப காலமாக கடல் ஆமைகள் காயங்களுடன் இறந்து கரை ஒதுங்குவது அதிகரித்து வருகிறது. நேற்று கரை ஒதுங்கிய கடல் ஆமையை வனத்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Tags : Rameswaram , Rameshwaram ,Paampan, seashore,Sea turtle
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை