×

திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் 28ம் தேதி தொடக்கம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

ராணிப்பேட்டை:  வேலூர் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை, திருப்பத்தூர் புதிய மாவட்டங்களை முறைப்படி துவக்கி வைக்கும் விழா வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி மைதானத்தில் பகல் 12 மணிக்கு நடைபெறும் விழாவில் திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை முறைப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து பேசுகிறார்.

தொடர்ந்து பிற்பகல் 2.30 மணியளவில் ராணிப்பேட்டையில் நடைபெறும் விழாவில் ராணிப்பேட்டை புதிய மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசுகிறார். இதற்காக ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலையத்தில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், விழா நடைபெறும் இடத்தை ராணிப்ேபட்டை மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி நேற்று ஆய்வு செய்தார். அதேபோல் திருப்பத்தூர் ஆசிரியர் நகர் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளி மைதானத்தில் விழா நடைபெறும் இடத்தை கலெக்டர் சிவன் அருள் நேற்று பார்வையிட்டார்.

Tags : Thiruppattur ,Ranipettu Districts ,Ranipet Districts ,CM Edappadi Palanisamy Thiruppattur , Thiruppattur and Ranipet districts
× RELATED ஒரே நாளில் ₹12.64 கோடிக்கு டாஸ்மாக்...