சென்னை: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 5 மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக பி.விஜயகுமார், தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக ஜி.சுகுணா சிங் மற்றும், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.யாக டி.ஜெயச்சந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், செங்கல்பட்டு எஸ்.பி.யாக டி.கண்ணன் மற்றும், ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி.யாக ஏ.மயில்வாகனனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.