டெல்லி : சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் கடந்த ஆண்டு உத்தரவுக்கு தடை விதிக்கப்படவில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று சீராய்வு மனு மீதான தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு வழங்கிய பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு தடையில்லை என்றும்
கூறியுள்ளது. சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 56 சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் அனைத்து வாதங்களும் நிறைவு பெற்றதையடுத்து 9 மாதங்களுக்குப் பிறகு இன்று அந்த வழக்கில் தீர்ப்பு வெளியானது.