வேலூர்: ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் 4-ம் நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். உயிருக்கு பாதுகாப்பு இல்லை என கூறி புழல் சிறைக்கு மாற்ற வலியுறுத்தி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தன்மீது சிறைத்துறை வேண்டுமேன்றே பழிசுமத்துவதாக கூறி ஏற்கனவே 17 நாள் உண்ணாவிரதம் முருகன் இருந்தது குறிப்பிடத்தக்கது.