கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கவுந்தப்பாடியில் அமைச்சர் கருப்பணன், நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் காற்று மாசு அதிகம் என்பது தவறான தகவல். டெல்லி போன்று தமிழகத்தில் காற்று மாசு ஏற்பட வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் எந்த ஒரு தொழிற்சாலையிலும் கரும்புகை வெளியேறாத அளவிற்கு தடுப்பு சாதனம் பொருத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடும் அளவிற்கு கரும்புகை வெளியேற்றும் தொழிற்சாலைகள் மூடப்படும் என்றார்.