×

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் தொடங்கியது..!!

சென்னை: உற்பத்தி நிறுத்தம் காரணமாக 650-க்கும் மேற்பட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி தொழிலை சார்ந்த 1,000-க்கும் மேற்பட்ட சார்பு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. தீப்பெட்டி ஆலைகள் மூடலால் கோவில்பட்டி, எட்டயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தீப்பெட்டி ஆலைகளின் வேலைநிறுத்தத்தால் தினமும் ரூ.6 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என உற்பத்தியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் ஏப்.22 வரை தீப்பெட்டி தொழிற்சாலைகளின் வேலைநிறுத்தம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : factories ,Thoothukudi district ,CHENNAI ,Kovilpatti ,Ettayapuram ,Dinakaran ,
× RELATED இலவச பட்டா வழங்கிய இடத்தில் குடியேறி பொதுமக்கள் போராட்டம்