கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வாகன சோதனையில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி சந்தோஷ்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, போலீசார் தாக்குதல் என புகார் தெரிவிக்கப்பட்டது. இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வந்த 55 வயது மூதாட்டி அய்யம்மாள் கீழே விழுந்து உயிரிழந்தார்.