×

ஆந்த்ராக்ஸ் தாக்கி 110 ஆடுகள் பலி

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் பகுதியில் வேகமாக பரவி வரும் ஆந்த்ராக்ஸ் நோய்க்கு 110 ஆடுகள் பலியானது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலையில் ஆட்டுக்கிடை நடத்தி வருபவர் ராமர். கிடையில் 200க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. கடந்த நவ.5ம் தேதி முதல் அவருடைய ஆடுகள் ஒவ்வொன்றாக ஆந்த்ராக்ஸ் நோய் பாதிப்பால் இறந்து வருகின்றன. ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கியவுடன் ஆடுகள் வாயில் நுரை தள்ளி ரத்தம் வடிகிறது. அடுத்த சில நிமிடங்களில் ஆடு இறந்து விடுகிறது.

தகவலறிந்த கால்நடைத்துறை மருத்துவர்கள் மற்றும் கால்நடைத்துறை உதவி இயக்குனர் சஞ்சீவி ராஜா தலைமையில் மருத்துவக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். மீதமுள்ள ஆடுகளுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.நேற்று வரை மொத்தம் 110 ஆடுகள் இறந்துள்ளதாக ஆட்டு வியாபாரி ராமர் தெரிவித்தார். மேலும் இறந்துபோன ஆடுகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Anthrax , attacks , 110 goats , kills
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்