சென்னை : எல்லைத் தாண்டி வந்து மீன்பிடித்ததாக நாகூர் மீனவர்கள் 20 பேரை ஆந்திர மாநில மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர். நெல்லூர் மாவட்டம் காவலி கிராம கடல்பகுதியில் மீன்பிடித்தபோது நாகூர் மீனவர்கள் படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். ஆந்திர கடலுக்கு வந்து மீன்பிடித்ததாக கூறி சிறைபிடிக்கப்பட்ட 20 மீனவர்களும் ஆந்திர மீனவர்களால் தாக்கப்பட்டனர்.