×

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு : தமிழக போக்குவரத்து துறை பதிலளிக்க உத்தரவு

சென்னை : தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஜனவரியில் அரசு வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதை விட அரசுப் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வழக்கு தொடரப்பட்டது. கதிர்மதியோன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு டிசம்பர் 6ம் தேதிக்குள் தமிழக போக்குவரத்துத் துறை செயலாளர் மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Tags : cancellation ,Tamil Nadu Transport Department ,revocation , Government bus, surcharge, Government of Tamil Nadu, Transport Department
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வரும்...