சென்னை : பல பணிகளை மொத்தமாக ஒப்படைக்கும் பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல் அளித்துள்ளது. பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முத்துக்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு ஒரே டெண்டர் விடும் பேக்கேஜ் முறை அமலாக்கம் குறித்து 2019 பிப்ரவரியில் அரசாணை வெளியிடப்பட்டது. பேக்கேஜ் டெண்டர் அரசாணையில் நிபந்தனையை நிறைவேற்றக் கூடிய ஒப்பந்ததாரர்கள் ஒரு சிலரே தமிழகத்தில் உள்ளதாக மனுதாரர் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.