×

தாசில்தார் எரித்து கொலை எதிரொலி கயிறுக்கு மறுபக்கம் இருந்து மனு பெற்ற பெண் தாசில்தார்

திருமலை: தெலங்கானா மாநிலத்தில் பெண் தாசில்தார் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தால், ஆந்திராவில் தாசில்தார் ஒருவர் மனுக்களை அலுவலகத்திற்கு வெளியில் நின்ற பொதுமக்களிடம் இருந்து கயிறு கட்டி பெற்ற சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், அப்துள்ளப்பூர்மெட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு சுரேஷ் என்பவர் பிரச்னைக்குறிய நிலத்திற்கு பட்டா வழங்காததை கண்டித்து, தாசில்தார் விஜயா ரெட்டியை எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், பத்திகொண்டாவில் தாசில்தார் உமாமகேஸ்வரி தனது அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அப்போது, தனது அறையில் பொதுமக்கள் மற்றும் புகார் அளிக்க வருபவர்கள் யாரையும் உள்ளே வர  அனுமதிக்‘கக் கூடாது என்று அலுவலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், தன்னை சந்திக்க வரும் பொதுமக்கள் மனு வழங்க வேண்டும் என்றால் ஒரு கயிறில் கட்டி வெளியில் இருந்தே அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து, தாசில்தார் உமாமகேஸ்வரி கூறுகையில், `எனது பாதுகாப்பில், கவனமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதற்காகதான் இந்த ஏற்பாடு’’ என்றார்.


Tags : burning ,murder ,Dasildar ,Dasillard , Dasildar,murder,petition, Dasillard
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...