×

முரசொலி கட்டிட விவகாரம்: போலீஸ் கமிஷனரிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்

சென்னை: முரசொலி கட்டிடம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக சமூகவலைதளங்களில் செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று புகார் ஒன்று அளித்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  முரசொலி கட்டிடம் முன்பு 18ம் தேதி நாகர் சேனை என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக சமூகவலைதளங்களில் செய்தி பரப்பப்பட்டுள்ளது. அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் யார் என்று எங்களுக்கும் தெரியவில்லை. போலீசுக்கும் தெரியவில்லை.

யார் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க முரசொலி அறக்கட்டளை அறங்காவலர் குழு உறுப்பினர் என்ற முறையில் புகார் அளித்துள்ளேன். விரைவில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் உறுதியளித்தார். திட்டமிட்டு பரப்பப்படும் பொய்யான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் நடவடிக்ைக எடுப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

Tags : Murasoli ,Bharathi ,police commissioner ,RS Bharati , Murasoli, Police Commissioner, RS Bharathi
× RELATED ஆதரவற்றோரை மீட்டு மறுவாழ்வு