×

ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலுக்கு1.67 கோடி தொகை அரசு வழங்கியது

சென்னை: திருவனந்தபுரம்  ஸ்ரீபத்பநாபசுவாமி கோயிலுக்கு 2001-2019ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள தஸ்திக் தொகை வழங்குவது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர் தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், கன்னியாகுமரி கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ₹1,67,20,225 நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும் என கணக்கிடப்பட்டது.
திருவனந்தபுரம்,ஸ்ரீபத்பநாபசுவாமி கோயிலுக்கு தஸ்திக் நிலுவை தொகையாக ₹1,67,20,225க்கான காசோலைகளை அத்திருக்கோயிலின் செயல் அலுவலரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

Tags : government , government,Sripadmanabaswamy, temple
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...