சென்னை: திருவனந்தபுரம் ஸ்ரீபத்பநாபசுவாமி கோயிலுக்கு 2001-2019ம் ஆண்டு வரை நிலுவையில் உள்ள தஸ்திக் தொகை வழங்குவது தொடர்பாக, நில நிர்வாக ஆணையர் தலைமையில் இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள், கன்னியாகுமரி கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ₹1,67,20,225 நிலுவை தொகை வழங்கப்பட வேண்டும் என கணக்கிடப்பட்டது.
திருவனந்தபுரம்,ஸ்ரீபத்பநாபசுவாமி கோயிலுக்கு தஸ்திக் நிலுவை தொகையாக ₹1,67,20,225க்கான காசோலைகளை அத்திருக்கோயிலின் செயல் அலுவலரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.