திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரூபாய் 19.59 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவை சேர்ந்த அகமது குட்டி என்பவரிடம் 508 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.