புதுச்சேரி: திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தை தலைகுனிய வைத்த செயலை வன்மையாக கண்டிப்பதாக நாராயணசாமி பேட்டி அளித்துள்ளார். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் தமிழர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.