சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.29,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.3,701க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, 24 கேரட் தங்கம் 8 கிராம் ரூ.30,912-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து 50.50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ ரூ.50,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில், தங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கம் கொண்டு காணப்படுகிறது. இதன் காரணமாக, தங்கத்தின் விலையில் தினமும் மாற்றம் உண்டாகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.
கடந்த ஒரு வார காலமாக தங்கம் விலை உயர்வதும் பின் குறைவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் கடந்த சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.29,640க்கு விற்பனையானது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.3,705க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து ரூ.29,608-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி வெள்ளியின் விலை, ஒரு கிராம் ரூ.50.70 காசுகளுக்கும், ஒரு கிலோ ரூ.50,700 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுதவிர, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,798 ஆகவும், டெல்லியில் ரூ.3,787 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,822 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,710 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,634 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,711 ஆகவும், ஒசூரில் ரூ.3,713 ஆகவும், கேரளாவில் ரூ.3,603 ஆகவும் இருக்கிறது.