தஞ்சாவூர்: வல்லம் அருகே திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். கிராமம் என்பதால் திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட காரணமாக விஷமிகளை உடனே கண்டறியலாம் என பெ.மணியரசன் கூறியுள்ளார். திருவள்ளுவர் சிலையை அவமதித்த விஷமிகளை உடனே கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெ.மணியரசன் கூறினார்.