×

தமிழகம் முழுவதும் குண்டு வெடிக்கும்: சிறுவனின் குரலில் பேசிய மர்ம நபருக்கு போலீஸ் வலை

சென்னை: தமிழகம் முழுவதும் குண்டு வெடிக்கும் என்று சிறுவன் குரலில் மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.தமிழக காவல்துறை மாநில கட்டுப்பாட்டு அறை சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. அங்கு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் அழைப்புகள் அடிப்படையில் மாவட்ட காவல்  கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்புகள் மாற்றிவிடப்படும். இந்த பணியில் போலீசார் ஈடுபட்டிருந்த போது, நேற்று மாலை 4.30 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர் சிறுவன் குரலில் தமிழகம் முழுவதும் பல இடங்களில்  அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.

இந்நிலையில் இந்த அழைப்பு தொடர்பாக போலீசார் அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அழைப்பு வந்த செல்போன் எண்ணை வைத்து, சைபர் கிரைம் போலீசார் உதவியுடன், மர்ம நபரை போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறிதுநேரம் பரபரப்பு  ஏற்பட்டது.கான்ட்ரோல் ரூமுக்கு பேசிய நபர் சிறுவன் குரலில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் என்று கூறி இணைப்பை துண்டித்து விட்டார். இந்த அழைப்பு தொடர்பாக போலீசார் அனைத்து மாவட்ட  காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu , Bomb, explodes , Tamil Nadu
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...