×

பேசின்பிரிட்ஜ் ரயில்வே மேம்பாலத்தில் அந்தரத்தில் தொங்கும் தடுப்புச்சுவர்: விபத்து அபாயம்

தண்டையார்பேட்டை: பேசின்பிரிட்ஜ் ரயில்வே மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர் இடிந்து, அந்தரத்தில் தொங்குவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையம் அருகே வியாசர்பாடி, புளியந்தோப்பு, மூலக்கொத்தலம் ஆகிய பகுதிகளை இணைக்கும் ரயில்வே மேம்பாலம் உள்ளது. பழமைவாய்ந்த இந்த மேம்பாலம் பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட வெளிமாநிலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சென்ட்ரலுக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், மின்சார ரயில்கள் இந்த பாலத்தின் கீழ் செல்கின்றன.

இதேபோல், திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்ட்ரல், வியாசர்பாடி, புளியந்தோப்பு, தண்டையார்பேட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு ெசல்லும் வாகனங்களும், மூலக்கடை, செங்குன்றம், ஓட்டேரி, அயனாவரம் ஆகிய பகுதிகளில் இருந்து சென்ட்ரல், தங்கசாலை, பாரிமுனை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்களும் இந்த ரயில்வே பாலத்தை கடந்து செல்கின்றன. இந்நிலையில், இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்புச்சுவர் உடைந்து ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டு உள்ளது.

இந்த சுவர் இடிந்து விழுந்தால் கீழே உள்ள உயர் அழுத்த மின் அறுந்து விழும் நிலை உள்ளது. மேலும், அவ்வழியே செல்லும் ரயில்கள் மீதும் விழும் அபாயம் உள்ளது. அவ்வாறு விழுந்தால், பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே, உயிர் பலி ஏற்படுவதற்கு முன், உடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Basinbridge Railway Bridge: Accident ,Basinbridge Railway Bridge , Basinbridge, Railway Bridge, Block
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...