×

வேலூர் காவேரிப்பாக்கம் அருகே அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 2 வாலிபர்கள் காயம்

காவேரிப்பாக்கம்:  வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஆயர்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன்(65), விவசாயி. இவருக்கு அரங்கராஜன்(44), அசோக் குமார்(39) என 2 மகன்களும், ராஜலட்சுமி(40) என்ற மகளும் உள்ளனர். ராஜலட்சுமி சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் தலைமை  காவலராக  பணிபுரிந்து வருகிறார். இவர் ஆயர்பாடி கிராமத்திலிருந்து  உத்திரம்பட்டு கிராமத்திற்கு செல்லும் சாலையில் பழைய வீட்டை வாங்கி 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாடி கான்கிரீட் வீடு கட்டினார். கீழ் தளத்தில் உரக்கிடங்கும், முதல் தளத்தில் ஒரு வீட்டில் அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ்(27) என்பவரும் மற்றொரு பகுதியில் திருச்சியை சேர்ந்தவரும், வாடகைக்கு தங்கி உள்ளனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் அடுக்கு மாடிக் கட்டிடம் பயங்கர சத்தத்துடன் மளமளவென சரிந்து தரைமட்டமானது. தூங்கிக்கொண்டிருந்த நரேஷ்  லேசான காயத்துடன் கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அருகில் இருந்த வீட்டில் குமரவேல்(43), அவரது மனைவி பூங்கொடி(38), மகள் அஸ்வினி(18), மகன் சரவணன்(17), ஆகியோர் தூங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது இந்த கட்டிடத்தின் சுவர் இவர்களது சிமென்ட் கூரை வீடு மீது விழுந்தது. இதனால் சிமென்ட் கூரை தூங்கிக் கொண்டு இருந்த சரவணன் மீது விழுந்தது. இதில் அவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

Tags : persons ,apartment building ,Vellore Kaveripakkam , Vellore, apartment building
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...