சென்னை: திருப்பதியில் நவ.23 முதல் நவ.25 வரை 17வது தேசிய அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்க உள்ளது. இப்போட்டியில் நாடு முழுவதும் உள்ள மாவட்ட வாரியாக அணிகள் பங்கேற்க உள்ளன.இப்போட்டியில் பங்கேற்க உள்ள சென்னை மாவட்ட அணியை தேர்வு செய்வதற்கான ஜூனியர் தடகள போட்டி, சென்னையில் இன்று நடக்கிறது. பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் சிறுவர், சிறுமிகளுக்கு யு-12, யு-14, யு-16 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். ஓட்டம், நீளம் தாண்டுதல் என சிறுவர், சிறுமிகளுக்கு தலா 48 வகையான போட்டிகளில் சிறப்புஇடம் பெறுபவர்கள், சென்னை மாவட்டத்துக்கான அணியில் பங்கேற்பார்கள். இந்த தகவலை சென்னை மாவட்ட தடகள சங்க கவுரவ செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.