தேனி: தேனி மாவட்டம் மஞ்சளாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 2ம் தேதி முதல் 135 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டுகளுக்கு முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நீர் திறப்பால் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5,259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என அவர் தெரிவித்துள்ளார். விவாசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் எனக் கூறியுள்ளார்.