×

வீட்டு கூரை இடிந்து விழுந்து 11 மாத குழந்தை பரிதாப சாவு

பெங்களூரு: வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி கொண்ட 11 மாத கைக்குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. வட கர்நாடக மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக கனத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து இன்னும் மீண்டு வராமல் உள்ள அந்த மக்களுக்கு மறுபடியும் மீண்டும் மழை பெய்து அச்சம் காட்டி வருவதால், பதட்டத்துடன் காணப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் நேற்று பாகல்கோட்டையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது. திம்மண்ணா, அக்சிதா தம்பதியின் மகன் இந்த 11 மாத கைக்குழந்தை. நேற்று முன்தினம் அனைவரும் அயர்ந்து தூங்கி  கொண்டிருந்தனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

இந்நிலையில் அதிகாலையில் திடீரென்று மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 11 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். சத்தம் கேட்டு ஓடி வந்தவர்கள் அக்சிதா உள்பட 3 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 11 மாத கைக்குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை. அதாவது மேற்கூரை இடிந்து விழுந்ததில் குழந்தையின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தினர். அதி்ல் கன மழையால் வீட்டின் மேற்கூரை சிதலம் அடைந்து காணப்பட்டதே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்தது- இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்திற்கு உள்ளூர்  எம்.எல்.ஏ மற்றும் அரசியல் பிரமுகர்கள் சென்று பார்வையிட்டுள்ளனர்.



Tags : baby ,house , roof , house ,collapses,d baby dies
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி