×

குழந்தை சுஜித் சந்தேக மரணம் போலீஸ் வழக்குபதிவு

மணப்பாறை: குழந்தை சுஜித் சந்தேக மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது குழந்தை சுஜித் கடந்த 25ம்தேதி அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. நேற்றுமுன்தினம் அதிகாலை சுஜித்  சடலமாக மீட்கப்பட்டான். பின்னர் அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  

இந்த சம்பவம் குறித்து வேங்கை குறிச்சி கிராம நிர்வாக அதிகாரி மணப்பாறை போலீசில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து மணப்பாறை போலீசார் சுஜித் மரணம் குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குபதிவு செய்துள்ளனர். இது குறித்து மணப்பாறை டிஎஸ்பி குத்தாலிங்கத்திடம் கேட்டபோது, சுஜித்தின் உடலை உடற்கூறு ஆய்வு செய்த சிறப்பு மருத்துவ குழுவின் அறிக்கை வந்ததும் அதில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதற்கு ஏற்ப செக்‌ஷன் மாற்றப்படும் என்றார்.

Tags : Child sujith ,death , Child sujith, suspects death
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...