திருவனந்தபுரம் : குழந்தை சுஜித்தின் மறைவுக்கு கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் இரங்கல் தெரிவித்துள்ளார். சுஜித்தின் மரணத்தால் மனவேதனை அடைந்துள்ளதாகவும் இனியாவது இதுபோன்ற பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை விரைந்து மூட வேண்டும் என்றும் கேரள முன்னாள் ஆளுநர் சதாசிவம் கோரிக்கை வைத்துள்ளார். மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் 650 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்து 5 நாட்களான நிலையில் அழுகிய நிலையில் சிறுவன் உடல் மீட்கப்பட்டது தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.