கடலூர் : கடலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தில் ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வலிப்பு ஏற்பட்ட போதிலும் சமாளித்து பேருந்தை ஓரமாக நிறுத்தியதால் 30 மாணவர்கள் உயிர் தப்பினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஓட்டுநர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.