×

காஷ்மீரில் மீண்டும் குண்டு வெடிப்பு பஸ்சுக்கு காத்திருந்த 20 பேர் படுகாயம்: லாரி டிரைவரும் சுட்டுக்கொலை

காஷ்மீர்: ஜம்மு, காஷ்மீர் மாநிலம் சோபூரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 20க்கும் அதிகமான அப்பாவி மக்கள் படுகாயம் அடைந்தனர். அதில் அரை டஜனுக்கும் அதிகம் பேர் கவலைக்கிடமாக உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.சோபூர் நகரில் உள்ள பஸ் நிறுத்தம் ஒன்றில் ஏராளமானோர் பஸ்சுக்காக நேற்று காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள் பஸ் நிறுத்தத்தில் இருந்தவர்கள் மீது வெடிகுண்டு வீசி யுள்ளனர். குண்டு வெடித் தத்தில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காதைப் பிளக்கும் சத்தத்துடன் குண்டு வெடித்ததும், பலரும் அலறியடித்து ஓடத் தொடங்கினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் சிக்கி 20க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களில் 6 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

நகரின் கரண் நகர் காவல் நிலையம் மீது கையெறிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய 48 மணி நேரத்திற்குள் அடுத்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்திருப்பது அங்கு அச்சம் ஏற்படுத்தி உள்ளது.லாரி டிரைவர் பலி: தெற்கு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பெஹரா அடுத்த கனில்வன் அருகே ஆப்பிள் லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் நாராயண் தத் என்பவரை துப்பாக்கியால் சுட்டு தீவிரவாதிகள் நேற்று கொலை செய்தனர். தகவலறிந்து விரைந்து செயல்பட்ட ராணுவமும், போலீசும் மேலும் 2 டிரைவர்களை தாக்குதலில் இருந்து காப்பாற்றினர். தீவிரவாத தாக்குதலுக்கு சமீப காலத்தில் 4 டிரைவர்கள் பலியாகி இருப்பது கவனிக்கத்தக்கது.சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்ட காஷ்மீர் நிலை குறித்து ஆய்வு செய்ய ஐரோப்பிய யூனியன் எம்.பிக்கள் இன்று அங்கு செல்லும் நிலையில், தீவிரவாத வெறிச்செயல் அங்கு அரங்கேறியுள்ளது.

Tags : Kashmir ,Lorry accident , Kashmir, bus, lorry accident
× RELATED குங்குமப்பூவின் நன்மைகள்!